தமிழகத்தில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு இணையான வசதிகளை அனைத்து நகர்ப்புறங்களிலும் மேம்படுத்தும் நோக்கில், 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக உயர்த்துவதற்கான அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
படுக்கையறை காட்சி குறித்து பேசிய பிக் பாஸ் பூர்ணிமா ரவி.., அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனவா பேசுவீங்க!!
அதன்படி திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகள் அருகே உள்ள பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளார்.