தமிழகத்தில் 2023 – 24ம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறதது. தேர்வுகளில் கல்வித்துறை எதிர்பாராத அளவிற்கு மாணவர்கள் ஆப்சென்ட் ஆகும் நிலை நடப்பு ஆண்டிலும் நீடித்து வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பவியல் ஆகிய பாடங்களில் மொத்தம் 11,821 பள்ளி மாணவர்களும், 1254 தனித்தேர்ர்களும் கலந்து கொள்ளவில்லை.
மொத்தம் தேர்வில் கலந்து கொள்ளாதவர்களின் எண்ணிக்கை 13075 என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு மீண்டும் துணைத்தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.