தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிவாரண தொகை? பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை!!!

0
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிவாரண தொகை? பரபரப்பு அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை!!!

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பெரும்பாலான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரண தொகை வழங்குவதற்காக சென்னை உள்ளிட்ட இடங்களில் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணம் வழங்கும் பணியை நாளை (டிச.17) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிலையில் நிவாரண தொகையை 10,000 ரூபாயாக வழங்க வேண்டும் என பா.ஜ.கா. மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “நிவாரணத்தொகையில் மத்திய அரசு கொடுத்த ரூ.900 கோடியே 75 சதவீதமாக உள்ளது. எனவே மாநில அளவிலான நிதியும் ஒதுக்கி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்.” என கூறியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

உள்ள போடி.., 80 வயதான மூதாட்டியை கீழே தள்ளிவிட்ட மருமகள்.., வீடியோ எடுத்த மகன்…, மாமியார் வீட்டுக்கு அனுப்பிய போலீஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here