இன்றைய சமுதாயத்தில் மாமியாரை அம்மாவாக சில மருமகள்கள் நினைத்தாலும் கூட,ஒரு சிலர் மாமியாரை கொடுமை படுத்தும் அளவுக்கு கொடூரமாக நடந்து கொள்கின்றனர். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஒரு மருமகள் மாமியாரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த தாமஸ் என்பவருடைய மனைவி தான் மஞ்சுமோள் (42). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில், அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் தாமஸ் தன்னுடைய தாயாரை தனது வீட்டில் வைத்து பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தாய்க்கு என்று ஒரு ரூம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வெளியே வந்ததால் மருமகள் உள்ளே போ என்று மிரட்டுகிறார். ஆனால் அவர் உள்ளே போகாததால் மாமியார் என்று கூட பாராமல் கீழே தள்ளி விடுகிறார். இதனை தடுக்கமால் தாமஸ் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து காவல்துறை அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் இந்த ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை., அலெர்ட்டா இருந்துங்க!!