சமீப காலமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், விவசாயிகள் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அந்த வகையில் ராமநாதபுரத்தில் உள்ள வேளாண் பயிர் பாசனத்திற்காக வைகையில் அணையில் இருந்து தண்ணீர் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த நீர் தேனி, திண்டுக்கல், மதுரை, மற்றும் சிவகங்கை வழியாக சென்று ராமநாதபுரத்தை அடைகிறது. இதைத்தொடர்ந்து நாளை (டிச.17) முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை நொடிக்கு 2,500 கன அடி வரை நீர் திறக்கப்பட உள்ளதால் மேற்குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
சபரிமலை செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியமா? தமிழக அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!