கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் வலுப்பெற்று வருகிறது. இதனால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “புதிய வகையாக பரவி வரும் கொரோனா தொற்று குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் பாதித்தவர்கள் 3, 4 நாட்களில் குணமாகி விடுவதால், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் RT PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும். சபரிமலை செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை அவசியம் இல்லை.” என கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ஏற்பாடு…, வெளியான முக்கிய தகவல்!!