தற்போதைய காலகட்டத்தில் பாலியல் கொடுமை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதாவது சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமையால் அவதிப்படும் சம்பவம் ஆங்காங்கே நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் 13 வயது சிறுமி கர்ப்பமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பீகாரில் இருந்து வந்த ஒரு குடும்பம் கோவையில் தஞ்சம் புகுந்தனர். அந்த குடும்பத்தில் 13 வயது சிறுமி வசித்து வரும் நிலையில், அப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் சேர்ந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த சிறுமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள்ளே சென்று அந்த 12 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்து, வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதனால் வீட்டில் சொல்லாம இருந்த அந்த சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் காணப்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பதும் அதற்கு காரணம் அந்த சிறுவன் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது.இதுகுறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போக்சோவின் கீழ் கைது செய்து சீர்திருத்தப் பள்ளியில் சிறுவன் அடைக்கப்பட்டுள்ளார்.