கொரோனா தொற்றுநோயின் வேகத்தை கட்டுப்படுத்த மற்றும் சமாளிக்க எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் பலர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து கொரோனா 2ஆம் அலையின் தடுப்பு பணிக்கான கட்டளை ஆய்வு மையம் ஒன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முதலைமச்சர் ஸ்டாலின் நேற்று இரவு அந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அது குறித்து அவர் கூறுகையில் “நான் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் கோவிட் -19 ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை (போர் அறை) பார்வையிட்டேன். இது படுக்கைகள், மருந்து பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜனைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்க பட்டுள்ளது” என்று முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.அதை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் 31,892 புதிய COVID வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் 20,037 per தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் மற்றும் 288 இறப்புகள் பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு மாநில சுகாதார துறை நேற்று தெரிவித்துள்ளது