சமீபத்திய GISAID ஆய்வு படி இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் நாடுகளின் பட்டியலில் பிரிட்டன் முதலிடம் பிடித்துள்ளது. அவ்வறிக்கையின்படி 2,200 க்கும் அதிகமானோர் இங்கிலாந்தில் இந்த உருமாறிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இங்கிலாந்திற்கு அடுத்த படியாக அமெரிக்கா (668) இரண்டாம் இடத்திலும், சிங்கப்பூர் (156) மற்றும் ஜெர்மனி (103) முறையை மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களை பிடித்துள்ளன.இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மிக மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளது.இந்த கொடிய நோயின் தாக்கத்தால் கொத்து கொத்தாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
தற்போது இந்தியாவில் பரவும் இந்த புதிய உருமாறிய கொரோனா வைரஸூக்கு பி1. 617.2 என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி மேலும் 20 நாடுகளிலும் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த செய்தி உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.