மதுரையில் தொடர்ந்து ஆயிரத்தை தாண்டி வரும் கொரோனா பாதிப்பு – கலக்கத்தில் மக்கள்!!

0
மதுரையில் தொடர்ந்து ஆயிரத்தை தாண்டி வரும் கொரோனா பாதிப்பு - கலக்கத்தில் மக்கள்!!
மதுரையில் தொடர்ந்து ஆயிரத்தை தாண்டி வரும் கொரோனா பாதிப்பு - கலக்கத்தில் மக்கள்!!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் கோரத்தாண்டவத்தினால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது.

கொரோனா பாதிப்பு:

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் கருதி கடந்த 10ம் தேதி முதல் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மக்கள் அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது விதிக்கப்பட்டும் பாதிப்பின் எண்ணிக்கை கூடுதலாக காணப்பட்டு வருகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் அச்சமடைந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மதுரையில் தொடர்ந்து ஆயிரத்தை தாண்டி வரும் கொரோனா பாதிப்பு - கலக்கத்தில் மக்கள்!!
மதுரையில் தொடர்ந்து ஆயிரத்தை தாண்டி வரும் கொரோனா பாதிப்பு – கலக்கத்தில் மக்கள்!!

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, கன்னியாகுமரி, திருவள்ளூர் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் வராமல் மக்களை அதிக அளவில் பாதித்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி வருகிறது. கடந்த புதன்கிழமை(மே 12) நிலவரப்படி மதுரையில் ஒரே நாளில் 1,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்றைய(மே 14) நிலவரப்படி மதுரையில் புதிதாக 1250 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 7606 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மதுரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here