கொரோனா நோய்பரவல் காரணமாக நாட்டில் புதிய கல்வி கொளகை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இதனை அமல்படுத்துவது குறித்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
புதிய கல்வி கொள்கை:
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
கடந்த 1986ம் ஆண்டு முதல் சுமார் 34 ஆண்டுகளாக நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த கல்வி கொள்கை தற்போது மாற்றப்பட்டு புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படவுள்ளது. இதனை பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தின் காரணமாக கல்வி வளர்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று நாட்டின் முன்னேற்றத்திற்கு இது முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்பட்டு வந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் தங்களது உயர்கல்வி வகுப்பினை தொடர 12ம் வகுப்பு பொதுத்தேர்வின் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படாமல் அனைத்து கல்லூரிகளுக்கும் பொது நுழைவு தேர்வு நடத்தி அதன் மூலமாக சேர்க்கை நடைபெரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தற்போது நாட்டில் கொரோனா நோய்பரவல் காரணமாக இதனை நடைமுறை படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் வருகிற மே மாதம் 17ம் தேதி ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று தெரிவித்தார்.