தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு?? முதல்வர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!!

0

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது இதனை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக முதல்வர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இரவு நேர ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனா நோய் பரவலின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர். அதில் பேருந்துகளில் நின்று பயணம் செய்ய தடை, தியேட்டரில் 50 சதவீத இருக்கைகள் போன்ற பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தியும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. இந்நிலையில் இதனை கட்டுப்படுத்துவது குறித்தும், தமிழகத்தில் கட்டுப்பாடு விதிமுறைகள் குறித்தும் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், விஜயபாஸ்கர் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தடுப்பூசி அதிகப்படுத்துதல், மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கட்டமைப்பு வசதி உள்ளிட்டவற்றை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?? அல்லது கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமா என்பது இந்த கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here