ராஜா ராணி 2- குப்பை தொட்டி வாங்குனதுக்கா சண்டை போடுவீங்க சிவகாமி! இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு!!

0

இன்று “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சந்தியாவிற்கு சரவணனுக்கு இருக்கும் காயம் பற்றி தெரியாததை கூறி சிவகாமி மிகவும் கோபம் அடைகிறார். சந்தியாவை நன்றாக திட்டி விட்டு சரவணனுக்கு மருந்து போட்டு விட சொல்கிறார்.

“ராஜா ராணி 2” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சரவணனிற்கு காலில் அடிபட்டது குறித்து சந்தியாவிற்கு தெரியவில்லை. இதனை அறிந்து சிவகாமி மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். அதே போல் இந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இருக்கும் அக்கறை சரவணனின் மனைவியான உனக்கு இல்லை என்றும் கூறி திட்டி விடுகிறார்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!

இதனால் வருத்தம் அடையும் சந்தியா சரவணனிற்கு கட்டு போட்டு விடுகிறார். பின், பார்வதி குப்பையை எடுத்து வருகிறார். புதிதாக வாங்கி இருக்கும் குப்பை தொட்டில் அதனை போட வேண்டும் என்று கூறுகிறார். இதனால் கோபம் அடையும் சிவகாமி யார் குப்பை தொட்டியினை வாங்கி வந்தது என்று கேட்கிறார்.

அதற்கு பார்வதி அண்ணன் மற்றும் அண்ணி தான் தாங்களாகவே வாங்கி வந்து வைத்து விட்டனர் என்று கூறுகின்றனர். இதனை கேட்டு கோபம் அடையும் சிவகாமி சந்தியாவின் முன்பாகவே புது குப்பை தொட்டியினை உடைத்து விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சந்தியாவிற்கு இந்த செயலால் என்னவோ போல் ஆகி விடுகிறது. அதே போல் சரவணனை அழைத்து வந்து சண்டை போடுகிறார். குடும்பத்தினர் யாரிடமும் கேட்காமல் இப்படி தான்தோன்றித்தனமாக முடிவு எடுத்தது தவறு என்று சந்தியா மற்றும் சரவணன் இருவரையும் நன்றாக திட்டி விடுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here