நடிகர் சிம்புவின் குடும்பம் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
சிம்பு மீது புகார்:
தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு ரீச் ஆகவில்லை. இதையடுத்து தனக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதற்கு காரணம் நடிகர் சிம்புவின் மொத்த குடும்பம் தான் என்று பரபரப்பு புகார் ஒன்றை தயாரிப்பாளர் அளித்துள்ளார்.
அதாவது சிம்பு இந்த படத்தை, 50 சதவீத திரை பணிகள் முடிந்த போது வெளியிடச் சொன்னதாகவும், வெளியிட்ட பிறகு ஏதேனும் சிக்கல் நேர்ந்தால் அதற்கு தான் முழுப் பொறுப்பு ஏற்பதாகவும் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வந்து என்னிடம் பேசினார். அதை நம்பி நான் ஏமாந்து நிற்கிறேன். சிம்புவின் மொத்த குடும்பமும் என்னை கழுத்தறுத்து விட்டது என்று போலீசில் புகார் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்