இலங்கை அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதிக்குள் நுழைவதை உறுதி செய்தது.
டி20 உலக கோப்பை:
டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறும் நோக்கத்துடன் இன்று போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய இலங்கை வீரர்களில் குசல் மெண்டிஸ் (18), தனஞ்சய டி சில்வா(9) என அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இலங்கையின் தொடக்க வீரரான பத்தும் நிசங்கா மட்டும் ஒரு புறம் நிலைத்து நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவர், 45 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 67 ரன்கள் அடித்து அடில் ரஷித் பந்தில் வெளியேறினார். இதனால், இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியில், ஜோஸ் பட்லர் (28), அலெக்ஸ் ஹேல்ஸ் (47) என அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
ஐபிஎல் 2023 மினி ஏலம்…, ஒரு வீரருக்காக போட்டி போட காத்திருக்கும் CSK & பஞ்சாப் கிங்ஸ் லெவன்??
ஆனால், பின் வரிசை வீரர்கள் ஒரு இலக்க ரன்களில் வெளியேற, ஒருபுறம் பென் ஸ்டோக்ஸ் அதிரடி காட்ட இங்கிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் பென் ஸ்டோக்ஸ் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் 0.473 ரன் ரேட் மற்றும் 7 புள்ளிகளுடன் குரூப் 1 ல் 2வது இடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.