பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் முழு ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாகவும் டெல்லி செவிலியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
முக்கிய அறிவிப்பு:
மருத்துவத்துறையில் டாக்டர் மற்றும் செவிலியர்களின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்று. கொரோனா கால கட்ட ஊரடங்கின் போது கூட, இவர்களின் சேவை இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள செவிலியர்கள் சங்க கூட்டமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
தங்களுக்கான சேவைகளை முறைப்படுத்துதல், நீண்ட காலமாக தங்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பதவி உயர்வு, புதிய பணியிடங்களை உருவாக்குதல் ஆகிய முக்கிய கோரிக்கைகளை டெல்லி செவிலியர்கள் கூட்டமைப்பு வைத்துள்ளது.
அரசு விரைந்து அதை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக வரும் நவம்பர் 16ஆம் தேதி, அனைத்து செவிலியர்களும் பொது விடுமுறையில் செல்ல இருப்பதாகவும், அதற்கு மேலும் கோரிக்கைகளை நிறைவேற்ற படாவிட்டால் நவம்பர் 30 ஆம் தேதி முதல் முழு கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். மாநில செவிலியர்களின் இந்தப் போராட்டம், அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உருவாக்கியுள்ளது.