
இந்த நவீன காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாத ஆளே கிடையாது. உலகம் மொத்தமும் ஒரே கையில் அடங்கியது போல, ஒரு குட்டி ஸ்மார்ட் போனில் எல்லா விஷயங்களும் வந்து விட அதன் மவுசு அதிகரித்து விட்டது. வயது வித்தியாசம் இன்றி பலரும் உபயோகப்படுத்தும் பொருளாக மாறிவிட்டது. ஸ்மார்ட் போன்களில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதற்கு ஈடாக கெட்ட விஷயங்களும் உள்ளன.
இப்பொழுது உள்ள இளைஞர்கள் அதனை ஒரு சாதனமாக மட்டும் பார்க்காமல் அதனுடனேயே வாழ பழகி விட்டனர். மேலும் சிறு வயதிலேயே பலரும் தீய பழக்கத்திற்கு ஆளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படி இருக்க இப்பொழுது ஸ்மார்ட்போன் பற்றிய திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கழிவறையை காட்டிலும் 10 சதவீதம் அதிகமான கிருமிகள் இந்த மொபைல்களில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் டீனேஜ் வயதில் இருப்பவர்கள் பயன்படுத்தும் மொபைல்களில் 17,000 க்கும் அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளதாம். இதனால் தேவையில்லாமல் கழிவறை உள்ளிட்ட அசுத்தம் மிகுந்த இடத்தில் மொபைலை எடுத்து செல்ல வேண்டாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் 6 மாதத்திற்கு ஒரு முறை 40% ஆல்கஹால் கொண்டு மொபைலை சுத்தம் செய்வது நன்று என்று அறிவுரை கூறியுள்ளனர்.