இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்டை களமிறக்க வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
ரவிசாஸ்திரி
T20 வேர்ல்ட் கப் தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளனர். இந்த போட்டி நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகுந்த சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2022: அரையிறுதிக்குள் நுழைந்து இந்திய வீரர்கள் அசத்தல்!!
ஏனென்றால் இந்திய அணியை போலவே இங்கிலாந்து அணியும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசைக்கமுடியாத பார்மில் உள்ளனர். இதனால் எந்த அணி வெற்றி பெரும் என்பதை இப்போது வரை கணிக்க முடியவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டை ப்ளேயிங் 11 னில் களமிறங்கினாள் இந்திய அணியின் பேட்டிங் வரிசை இன்னும் தரமாக இருக்கும் என கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் குறைந்த தூரத்தில் தான் பவுண்டரி லைன்கள் இருக்கும். இது போன்ற மைதானங்களில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட கூடிய வீரர். எனவே ரோஹித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சரியான ப்ளேயிங் 11 னை களமிறக்க வேண்டும் என ரவிசாஸ்திரி அட்வைஸ் கொடுத்துள்ளார்.