T20 WC: இறுதி போட்டிக்கு யார் வந்தாலும் சரி.,எங்க வியூகம் இதான்., உடைத்து பேசிய பாகிஸ்தான் கேப்டன்!!

0
T20 WC: இறுதி போட்டிக்கு யார் வந்தாலும் சரி.,எங்க வியூகம் இதான்., உடைத்து பேசிய பாகிஸ்தான் கேப்டன்!!
T20 WC: இறுதி போட்டிக்கு யார் வந்தாலும் சரி.,எங்க வியூகம் இதான்., உடைத்து பேசிய பாகிஸ்தான் கேப்டன்!!

டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக எந்த அணி மோதும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் இந்நிலையில், இதுகுறித்து பாபர் அசாம் மற்றும் மேத்யூ ஹைடன் சில கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

டி20 உலக கோப்பை:

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் தோற்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அரையிறுதி வரை முன்னேறி இருந்தது. இந்த அரையிறுதி போட்டியிலும், நியூசிலாந்து அணியை தங்களது அதிரடியான பேட்டிங்கால் சேஸிங் செய்து வெற்றி பெற்றதுடன் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த உலக கோப்பை தொடரின் ஆரம்ப போட்டிகளில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் தடுமாறிய நிலையில், நியூசிலாந்துக்கு எதிராக 7 பவுண்டரிகளுடன் அரைசதம் (53) அடித்து அசத்தி, பார்ம் குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில், இறுதி போட்டிக்கு முன்னேறியது குறித்து பேசிய பாபர் அசாம், கடைசியாக 4 போட்டிகளில் விளையாடியது போலவே இறுதிப்போட்டியிலும் விளையாடுவோம் என்று கூறியுள்ளார்.

T20WC.., டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு., பரபரப்பான இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள்??

மேலும், இந்தியா அல்லது இங்கிலாந்து இதில் எந்த அணி இறுதிப்போட்டிக்கு வந்தாலும், எதிர்வரும் சவாலை சமாளிக்க 1000% முயற்சிப்போம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் ஆலோசகர் மேத்யூ ஹைடன், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுவதை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here