தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் சேர விரும்பினால், தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
செய்முறை பயிற்சி வகுப்பு:
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 2022-2023 கல்வி ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கியது. மேலும் கொரோனா வருகையால் முடங்கி இருந்த மாணவர்களும் தற்போது உற்சாகமாக பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதில் 2022-2023 கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வு எழுதி ( 2012க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில்) அத்தேர்வில் தேர்ச்சி ஆகாத தனித்தேர்வர்கள் வரும் 15ம் தேதி முதல் 25ம் தேதிக்குள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சிக்கு தங்கள் பெயர்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் ஆபிஸில் ரெஜிஸ்டர் செய்யலாம்.
ஜனாதிபதி முர்முவின் வருகை.,,பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை! புவனேஸ்வரில் அதிரடி!!
மேலும் வரும்15ம் தேதி முதல் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற தளம் வாயிலாக பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய வேண்டும். பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து 2 xerox எடுத்து கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து 10 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் அனைத்தும் வரும் பிப்ரவரி, 2023ல் தொடங்கும் என ஏற்கனவே கல்வித்துறை அறிவித்திருப்பது குறிப்பிடத் தக்கது.