IND vs SA: தோல்விக்கு இது தான் காரணம்…, விளக்கம் அளித்த ரோஹித்! மனதார ஏற்ற முன்னணி வீரர்!!

0
IND vs SA: தோல்விக்கு இது தான் காரணம்..., விளக்கம் அளித்த ரோஹித்! மனதார ஏற்ற முன்னணி வீரர்!!

இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடைந்த தோல்விக்கு இது தான் காரணம் என கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா:

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணியின் டாப் ஆர்டர்கள் தடுமாறி விரைவில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதில், சூர்யகுமார் யாதவ் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்ததுடன் இந்தியாவின் ஸ்கோரையும் ஓரளவுக்கு உயர்த்தி இருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், இந்திய அணி 20 ஓவரில் 133 ரன்கள் எடுத்திருந்தது. இந்த இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா 19.4 ஓவரில் 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், இந்திய அணி தோல்வி அடைந்தது. இது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, பெர்த் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமானது தான். இது தென் ஆப்பிரிக்காவுக்கு கை கொடுத்தது என்றார்.

மேலும், இந்திய அணி பீல்டிங்கில் அதிகமாக சொதப்பியதை ஒப்புக் கொண்ட ரோஹித், எய்டன் மார்க்ரம் விக்கெட்டை வீழ்த்த கிடைத்த வாய்ப்பை நானும் பயன்படுத்த தவறினேன் என்று கூறியுள்ளார். இந்த போட்டியில் கிடைத்த பாடத்தின் மூலம், இனி வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here