ICC உலக கோப்பை 2023 தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்தையும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. என்னதான் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தாலும், ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த முக்கிய வீரர் சூர்யகுமார் யாதவ் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 14 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 22 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.
Enewz Tamil WhatsApp Channel
அதுமட்டுமல்லாமல் சூர்யகுமார் ஆடிய கடைசி 10 ஆட்டங்களில் தொடர்ந்து சொதப்பி உள்ளார். இதனால் சூர்யகுமார் ஐபிஎல் தொடரில் மட்டுமே சிறப்பாக ஆடுவார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவர் தொடர்ந்து முக்கிய போட்டிகளில் சொதப்பி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே எதிர்வரும் போட்டிகளில் சொதப்பும் பட்சத்தில் அவருக்கு பதிலாக வேறு வீரரை களம் இறக்கலாம் என்று விமர்சனங்கள் எழுகின்றன.