தமிழ் சினிமாவில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து 5 மொழி நடிகர்கள் நடித்துள்ளனர். இதனாலே இப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. மேலும் இந்த திரைப்படம் ஃப்ரீ புக்கிங்கில் பெரிய சாதனையை படைத்ததாக சொல்லப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
உதிர்ந்த முடி முட்டியை தொடணுமா? உங்களுக்கான சூப்பரான ஹேர் பேக் இதோ., மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க!!
இப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை சென்றுள்ளார். அதாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் இமயமலை செல்ல இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஜெயிலர் படம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு நீங்கள் தான் படத்தை பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்ல வேண்டும் என ரஜினி பதில் அளித்தார்.