பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடந்த சிங்கிங் ரியாலிட்டி ஷோவில் பங்குபெற்று பிரபலமானவர் பாடகி நித்யஸ்ரீ. தற்போது நித்யஸ்ரீக்கு விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாடகி நித்யஸ்ரீ
விஜய் டிவியில் பிரபலமாகி ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த சிங்கிங் ஷோவில் ஜூனியர் சீசன் 2 வில் பங்குபெற்று தனது அழகிய குரலால் மக்களை கவர்ந்தவர் நித்யஸ்ரீ. பல்வேறு மொழிகளில் பாடி அசத்தி வரும் 25 வயதான நித்யஸ்ரீ தற்போது தனிப்பட்ட இசை ஆல்பங்களில் பாடி நடித்தும் வருகிறார்.
#INDvsENG டெஸ்ட் தொடர் – உள்ளூர் நடுவர்கள் நியமனம்!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது ஒரு இசை ஆல்பத்தில் பாடி நடித்து வரும் நித்யஸ்ரீ ஒரு சண்டை காட்சியில் நடிக்கும்போது கீழே விழுந்து அவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது விபத்து குறித்து சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் தான் பாடிவரும் ஒரு இசை ஆல்பத்தில் சண்டை காட்சிகள் இருந்தது. அந்த காட்சியில் நடிக்கும் போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சீக்கிரமாக அதிலிருந்து மீண்டுவந்து பணிக்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் நித்யஸ்ரீ.