பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பான் கார்டை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் ரூ. 2,000 மதிப்புள்ள கடனை பெற்றுள்ளார். இதற்கு பின்பு தான் பலரும் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சன்னி லியோன்:
உலகம் முழுவதும் உணவு, உடை என அனைத்துமே ஆன்லைன் வழியாக பெற்றுக்கொள்ள முடிகிறது. ஆன்லைன் யூகத்துக்கு மாற மாற மோசடிகளும் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் ஒரு மோசடியில் மாட்டி கொண்டு தவித்துள்ளார். அதாவது சன்னி லியோனின் பான் கார்டை பயன்படுத்தி DHANI என்கிற கடன் வாங்கும் நிறுவனத்திடம் இருந்து ரூ. 2,000 மதிப்புள்ள கடனை மர்ம நபர்கள் பெற்றுள்ளனர்.
மக்கள் அனைவரும் இந்த மோசடியை அறிந்துகொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்த மோசடி குறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு பிறகு தான் பலரும் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவருமே அந்த ட்வீட்டிற்கு பதில் ட்வீட் தெரிவித்து வருகின்றனர். இந்த மோசடி குறித்து தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Thank you @IVLSecurities @ibhomeloans @CIBIL_Official for swiftly fixing this & making sure it will NEVER happen again. I know you will take care of all the others who have issues to avoid this in the future. NO ONE WANTS TO DEAL WITH A BAD CIBIL !!! Im ref. to my previous post.
— sunnyleone (@SunnyLeone) February 17, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்