வங்கதேசத்துக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச் சுற்று கால்பந்துப் போட்டியில் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கால்பந்து ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பாக்கப்படும் பிபா உலகக்கோப்பைக் கால்பந்து தொடர் 2022 ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ளது. இதற்கான ஆசிய அணிகளின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி உலகக்கோப்பை தகுதி வாய்ப்பை இழந்து விட்டது.
இந்நிலையில் நேற்று தோகாவில் தரவரிசையில் 104வது இடத்தில் இருக்கும் இந்திய அணி 184வது இடத்தில் இருக்கும் வங்கதேச அணியை சந்தித்தது. இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தார். இது வரை 7 போட்டியில் ஒரு வெற்றியைத்தான் இந்தியா பெற்றுள்ளது. 3 தோல்வி, 3 ட்ராக்களுடன் பட்டியலில் 3ம் இடத்துக்கு முன்னேறியது.
அடுத்த ஒரே வாய்ப்பு இந்திய அணிக்கு ஜூன் 15ம் தேதி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றின் 3வது சுற்றுக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது. வேறு ஒரு நாட்டில் நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் வெற்றியை இந்தியா ஈட்டியுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!