பள்ளி மாணவிக்கு பாலியல் தொலை – போக்சோவில் மகரிஷி வித்யா மந்திர் ஆசிரியர் கைது!!!

0

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஆனந்தன் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொலை:

சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். இவர் அவரிடம் படிக்கும் மாணவிகளுக்கு  ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் மாணவிகள் ஆசிரியர் மீது புகார் அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இதனை தொடர்ந்து மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளனர். பள்ளி முன்னாள் மாணவி ஒருவர்,ஆனந்த் மீதான பாலியல் புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

மேலும், சில மாணவிகள், குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதினர். தற்போது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி ஒருவர் எழுத்துப்பூர்வமாக ஆனந்த் மீது புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரை தொடர்ந்து ஆசிரியர் ஆனந்தனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here