ஜூன் 21 முதல் செயல்படுத்தப்படவுள்ள தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை இந்திய அரசு இன்று வெளியிட்டது. கோவிட் -19 தடுப்பூசிகளின் நிதி, கொள்முதல் மற்றும் கருத்துக்களை நிர்வகிப்பதில் மாநிலங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இது வெளியிடப்பட்டது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
திருத்தப்பட்ட தடுப்பூசி கொள்கை:
இந்நிலையில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கான செலவு அனைத்தையும் மத்திய அரசே ஏற்கும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். தடுப்பூசி விநியோகத்திற்கான மாநில அரசுகளின் 25% செலவையும் மத்திய அரசே ஏற்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை இந்திய அரசு கொள்முதல் செய்யும் என்றும், தேசிய தடுப்பூசி திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே வாங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என்றும், அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி இலவசமாக அரசாங்க மையங்கள் மூலம் வழங்கப்படும், ”என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21 முதல் சில முக்கிய மாற்றங்கள்:
- இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட Non-transferable மின்னணு வவுச்சர்கள் அறிமுகப்படுத்தப்படும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பயனாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட இது மக்களுக்கு உதவும்.
- சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் வழங்கிய ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.150. முன்கூட்டிய ஆர்டர்கள் ஜூலை 31 வரை, பின்னர் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை பெறப்படும்.
- ‘தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் ஒதுக்கப்படும் எண்ணிக்கை குறைக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் சரியான விலையில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்’ என, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!