பொங்கல் பண்டிகை.., இதை செய்ய வேண்டும்.., தமிழக அரசுக்கு விவசாயிகள் வைத்த கோரிக்கை!!!

0
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் தை முதல் நாள் அன்று கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் விவசாயிகள் கரும்பு, நெல், மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்ய தயாராக உள்ளனர். மேலும் தமிழக அரசு இன்னும் சில தினங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த சூழலில் தமிழக அரசுக்கு விவசாயிகள் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.
அதாவது பொங்கல் பண்டிகைக்காக மஞ்சள், கரும்பு உள்ளிட்டவற்றை கூட்டுறவு மூலம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி கரும்பு ஒரு வண்டிக்கு 5,000 முதல் 5,500 வரை கிடைத்தால் நன்றாக இருக்கும். இதனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here