மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதுடன் அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது. இதனை மக்கள் முழுவதுமாக பெற வேண்டுமானால், இந்திய குடிமகன் என்பதற்கான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் அவசியமான ஒன்றாக உள்ளது. இதில், ஆதார் கார்டை வைத்தை பான் கார்டு பெற எளிதாக விண்ணப்பிக்க முடியும் என்பது பலரும் தெரியாத ஒன்றாக உள்ளது.
ஆதார் கார்டு மூலம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தல்:
- வருமான வரித் துறையின் https://www.incometax.gov.in/
iec/foportal/ அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் உள்நுழையவும். - அதில், ‘Quick Links’ க்கு கீழ் ‘Instant E-PAN’ என்பதை கிளிக் செய்து ‘Get New e-PAN’-யை தேர்ந்தெடுக்கவும்.
- இதனை தொடர்ந்து, தனித்துவமான 12 இலக்கங்களை கொண்ட ஆதார் எண்ணை உள்ளியீடு மேலே உள்ள பரிந்துரைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால்,I confirm that என்பதை கிளிக் செய்யவும்.
- இதையடுத்து, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு OTP வரும். இதனையும் உள்ளீடு செய்து, ‘ஆதார் OTP ஐ சரிபார்த்து தொடரவும்’ என்பதை தேர்வு செய்யவும்.
- இதன் பின், ‘மின்னஞ்சல் ஐடியைச் சரிபார்க்கவும்’ என்பதைக் கிளிக் செய்தவுடன் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு, பச்சை விளக்கு ஏற்ற பட்டவுடன், திரையில் ஒரு எண் தோன்றும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் தக்கல் பான் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம்.