உலகம் முழுவதும் இயற்கையின் சீற்றம் அதிகரித்து வருகிறது. ஒரு பக்கம் வெப்ப அலை அதிகரிக்கிறது, மற்றொரு பக்கம் நிலச்சரிவு, நிலநடுக்கம் என இயற்கையின் கோர தாண்டவத்தால் பல உயிர்கள் மடிந்து வருகின்றன. இந்த நிலையில் சுற்றுலா தளத்திற்கு பெயர் போன தைவான் நாட்டில் இயற்கை பேரிடரின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அந்த நகரத்தின் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகை அபர்ணா தாஸை திருமணம் செய்யும் மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர்.. இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!
அதாவது, தைவான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் காலை 7.58 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. இந்த பலத்த நிலநடுக்கத்தால் தைவானில் கட்டிடங்கள் குலுங்கி ஆட்டம் கண்டன. இதில் தற்போது வரை 4 பேர் பலியாகி உள்ளதாகவும், 60 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.