தமிழக மக்களே.., புயல் அடித்தாலும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும் – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!!

0
புயல் அடித்தாலும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக புயல் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் முன்னரே தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை கொடுக்க வேண்டும் என்று பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அதன்படி புயலால் மின் இணைப்பில் சிறு கசிவு ஏற்பட்டால் அதை உடனே சரி செய்வதற்கு 15, 300 ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். மின்கசிவு உள்ளிட்ட காரணங்களால் எந்தவொரு இடத்திலும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார் என்று மின்சார வாரியம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here