மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு பிற்காலத்தில் உதவும் வகையில் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களை போல வழக்கறிஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவீந்திர சர்மா சமீபத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில் அவர் வக்கீல்களுக்கு சமூகத்தில் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாததால், 80 வயதிற்கு மேல் தங்கள் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் அவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு இதுபோன்ற சிக்கல் ஏற்பட கூடாது என்பதற்காக மாதந்தோறும் ரூபாய் 15,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அந்த கோரிக்கையில் தெரிவித்தார். இந்நிலையில் உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் இந்த கோரிக்கையை விசாரித்துவிட்டு பழைய மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக உறுதியளித்தார்.