கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கான உதவித்தொகையை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெய்ப்பூர்
இந்தியாவில் காதல், கலப்பு, ஒரே பாலினத்தவர்களை சேர்ந்த திருமணம் சகஜமான ஒன்றாகிவிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் சிலர் ஆதரிக்க தான் செய்கின்றனர். இந்நிலையில் ஜெய்ப்பூர் மாநிலம் கலப்பு திருமணம் செய்வோரை மகிழ்விக்கும் விதமாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது ஜெய்ப்பூர் மாநிலத்தில் கலப்பு திருமணம் செய்யும் மணமக்களுக்கு இதுவரை உதவித் தொகையாக 5 லட்சம் வழங்கி வந்தனர். தற்போது இந்த உதவித்தொகையை 10 லட்சமாக வழங்க மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் இதற்கு சில கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளனர்.
கட்டழகு மேனியை காட்டி மாங்கு மாங்குனு ஒர்கவுட் பண்ணும் ஜாக்குலின்.., ஒருவேளை அதுக்கா இருக்குமோ!!
அதாவது கலப்பு திருமணம் செய்பவர்களில் ஆண் அல்லது பெண் பட்டியல் சாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தம்பதிகளின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாகவும், எந்த ஒரு குற்றவழக்கிலும் சிக்காமல் இருக்க வேண்டும். மேலும் திருமணம் ஆகி ஒரு ஆண்டுக்குள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.