ராஜஸ்தான் மாநில அரசு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள், கல்விப் பணியாளர்கள் மற்றும் துணை ஆசிரியர்களின் சம்பள விகிதத்தை திருத்தி அமைத்துள்ளது.
சம்பள விகிதம்:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொணடாடப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு மாநில அரசுகளும், தங்கள் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைபடி உயர்வு, போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் அரசும் தற்போது முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 31,000க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள், கல்வித் தொழிலாளர்கள் மற்றும் துணை ஆசிரியர்களின் சம்பள விகிதத்தை திருத்தியமைத்துள்ளதாக கல்வி அமைச்சர் பி.டி.கல்லா தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் சேவைக் காலத்தின் அடிப்படையில் இந்த சம்பளத்தைப் பெறுவார்கள்.
ஹோட்டல் ரூம்களில் கேமரா – தம்பதிகளை வீடியோ எடுத்து மிரட்டல்! 4 பேரை கைது செய்த போலீஸ்!!
அவர்கள் ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ரூ. 18,500 ஆகவும், 18 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு ரூ. 32,000 ஆகவும் பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளார். இந்த சம்பள உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவின் நகலையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த சம்பள உயர்வு ஒப்பந்த தொழிலாளர்கள், கிராம பஞ்சாயத்து உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்க்ளுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.