பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜை, கடந்த நவ.17 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த ஐயப்ப பக்தர் சென்னா ராவ் என்பவர், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றுள்ளார்.
அப்போது இவருக்கும் கோவில் பாதுகாலவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பாதுகாவலர்கள் பக்தர்கள் இடையே தாக்குதலாக மாறவே, சென்னா ராவ்-க்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதால், கோவில் நடை சாத்தப்பட்டதாக கூறியுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அரசு பள்ளிகளில் குறையும் இடைநிற்றல்…, அறிவிப்பை வெளியிட்டு பெருமிதம் கொண்ட டெல்லி முதல்வர்!!