உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, அனுதினமும் எண்ணற்ற பக்தர்கள் தரிசனத்திற்காக வந்த வண்ணம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை ஆந்திர அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அலிபிரி மலைப்பாதையை இணைக்கும் “ஸ்ரீநிவாச சேது மேம்பாலம்” தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ரூ.650 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் மூலம் சென்னை, பெங்களூர் மற்றும் ரேணிகுண்டா வழியாக வருபவர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் சூழ்நிலை கட்டுப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த ஸ்ரீநிவாஸ சேது மேம்பாலம் ஆரம்பத்தில் கருட வரதி என பெயரிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முறை ஆசிய கோப்பை இப்படி தான் நடக்கும்…, வெளியான முக்கிய அப்டேட்!!