போதைப்பொருள் வைத்திருந்தால், அவர்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அரசு உத்தரவு:
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி இந்த பொருட்களை விற்கும் கடைகளின் மீதும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் பல மாநிலங்களில், போதைப்பொருள் தடை சட்டம் கடுமையாக்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் ஒரு வழியாக அண்டை நாடான இலங்கையில், போதைப் பொருளுக்கு எதிராக அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி போதைப்பொருள் வைத்திருக்க நாடு முழுவதும் தடை விதிப்பதாகவும், இதையும் மீறி போதைப் பொருள் வைத்திருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடு., அரசின் அதிரடி நடவடிக்கை! பொதுமக்கள் மகிழ்ச்சி!!
இந்த புதிய சட்டம் நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வருவதாக, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.