இந்திய கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் மற்றும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி இவர்களுக்கு இடையிலான திருமணம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
கே எல் ராகுல்:
கே எல் ராகுல், ஐபிஎல் தொடருக்கு பிறகு, கொரோனா தொற்று மற்றும் காயம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய அணியிலிருந்து சில காலம் விலகி இருந்தார். ஆசிய கோப்பைக்கு முன் முழு உடல் தகுதி பெற்று மீண்டும் இந்திய அணியில் இணைந்து, தனது பார்மை மீட்க போராடி வந்தார். இந்த பின், சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்றார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
டி20 உலக கோப்பையில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். இவர் டிசம்பர் மாதம், பங்களாதேஷிற்கு எதிராக விளையாடுவதற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில், இவரது திருமணம் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் மற்றும் நடிகையுமான அதியா ஷெட்டியும், கே எல் ராகுலும் பல மாதங்களாக காதலித்து வந்தனர்.
உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பம்…, வெளியான தகவல்!!
இவர்கள் இருவருக்கும் இடையே விரைவில் திருமணம் நடைபெறும் என்று நடிகர் சுனில் ஷெட்டி முன்பு கூறியிருந்தார். இதன்படி, மும்பையில் உள்ள சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தேதி குறிப்பிடாமல் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர், நடிகைகளை திருமணம் செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.