கடந்த 21ஆம் தேதியன்று டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி இன்றுடன் (மார்ச் 28) காவல் முடிவடைய உள்ள நிலையில், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்து வரப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம், முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், “டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவே, அமலாக்கத்துறை என்னை கைது செய்துள்ளது. இவர்களின் இந்த சதி திட்டத்திற்கு டெல்லி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” ஏன் தெரிவித்துள்ளார்.
Enewz Tamil டெலிக்ராம்
இலவச கேஸ் சிலிண்டர் பெற இது ஒன்னு மட்டும் போதும்.., வெளியான சூப்பர் நியூஸ்!!!