லோகேஷ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்துள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியான நிலையில், பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ புக்கிங் வெளியூரில் வேகமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் இன்னும் டிக்கெட் விற்பனை செய்ய ஆரம்பிக்கவில்லை.
Enewz Tamil WhatsApp Channel
அதற்கு காரணம் தமிழகத்தில் சிறப்பு ஷோ இல்லை என்று அரசு தெரிவித்த நிலையில் தற்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 19ம் தேதி முதல் ஷோ 4 மணிக்கு திரையிட இருக்கிறது. எனவே ஒரு நாளைக்கு 5 ஷோவுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை 7 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜோவிகா தான் பிரச்சனை., அவளை அடித்து தூக்கணும்., மாயா போடும் மாஸான திட்டம்., பிக் பாஸ் 3 ப்ரோமோ!!