தமிழகத்தில் மருத்துவ துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TN MRB) வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2250 கிராம சுகாதார செவிலியர் / துணை செவிலியர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கும் இந்த நேரடி ஆட்சேர்ப்பில் கலந்து கொள்ள, அக்டோபர் 31ஆம் தேதிக்குள் mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த பதவிகளில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,500லிருந்து ரூ.62,000க்குள் மாதாந்திர ஊதியம் வழங்கப்படும். கூடுதல் விபரங்களான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களுக்கு மேலே உள்ள தேர்வாணையம் அறிவிப்பை பார்வையிடலாம்.