இன்று முதல் மது விற்பனைக்கு தடை – தென்னாப்பிரிக்க அரசு அதிரடி!!

0

தற்போது கொரோனாவின் உருமாறிய வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா அரசு தனது நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மது விற்பனைக்கு தடைவிதித்துள்ளது.

உருமாறிய கொரோனா:

கடந்த 10 மாதங்களாக கொரோனா என்னும் வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி வருகிறது. தற்போது அதன் வீரியம் குறைந்துள்ளதால் அனைத்து நாடுகளும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் முனைப்புடன் வேலை செய்து வருகின்றனர். ஆனால் அனைவரும் அதிர்ச்சி அடையும் வகையில் இங்கிலாந்து நாட்டில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது முந்தைய கொரோனா வைரஸை விட 70 சதவீதம் வீரியம் மிகுந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் இங்கிலாந்து நாட்டில் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் இங்கிலாந்து செல்லும் விமான போக்குவரத்தை நிறுத்திவிட்டது. ஆனால் தற்போது இந்த மாத தொடக்கத்தில் இங்கிலாந்தில் இருந்து தென்னாப்பிரிக்கா திரும்பியவருக்கு புதுவகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் கொரோனா பரவலை கடுப்பதுவதற்கான நடவடிக்கைகளை தென்னாப்பிரிக்கா அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக தென்னாபிரிக்க அரசு இன்று முதல் மது விற்பனைக்கு தடைவிதித்துள்ளது. இதனால் குடிமகன்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். காரணம் மதுபானங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க கூடும். மேலும் இதனால் கொரோனா வைரஸின் பரவல் அதிகமாகிவிடும் என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here