தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை, தனியார் பள்ளிக்கு நிகராக திறன், கல்வி, உள்கட்டமைப்பு போன்றவைகளை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஏழை எளிய மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்துடன் காலை உணவுத் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதன் தொடர்ச்சியாக “ரியான் டெக்” என்ற ஜப்பான் நாட்டு தனியார் நிறுவனம் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வழங்கியுள்ளனர். அதாவது பள்ளி படிப்பிற்கு தேவையான கருவிகளை நவீன தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்ட வகுப்பறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதையடுத்து முதல் கட்டமாக சேப்பாக்கம் முதல் திருவல்லிக்கேணி வரை உள்ள 18 அரசு பள்ளிகளில் 88 வகுப்பறைகளை தயார் செய்து வருகின்றனர்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனே இதை செய்து தர உத்தரவு., 4 நாட்களுக்குள் முடிக்க கல்வித்துறை முடிவு!!
இந்த திட்டத்துக்காக ஒரு வகுப்பறைக்கு ரூ.3.20 லட்சம் செலவு செய்துள்ளதாக ரியான் டெக் நிறுவனத்தின் நிர்வாகி மனோகர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த நவீன வகுப்பறையை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உயர்நிலை பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.