தமிழகத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இன்னும் ஒரு வாரத்திற்குள், இதை கண்டிப்பாக பள்ளிகள் உருவாக்கித் தர வேண்டும் என கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்வித்துறை உத்தரவு :
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு குறித்த அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளதால், மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கல்வித்துறை அறிவித்திருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அந்த வகையில், தற்போது தமிழக முழுவதும் உள்ள அனைத்து பிளஸ் 2 மாணவர்களுக்கும் வரும் 9 முதல் 12 ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரியை பள்ளிகள் உருவாக்கி தர வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இனிமே இந்த கறி சாப்பிடாதீங்க., வாய்க்கு வந்ததைப் பேசி வாங்கி கட்டிக் கொண்ட பிரபல மருத்துவர்!!
உயர்கல்வி சேர மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு மின்னஞ்சல் கட்டாயம் என்பதால், பள்ளிகளிலேயே இதை உருவாக்கி தர வேண்டும் என, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் இது சார்ந்த நடவடிக்கைகளில் அனைத்து பள்ளிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.