ISL: ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக சென்னை அணி…, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்??

0
ISL: ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக சென்னை அணி..., தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்??
ISL: ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக சென்னை அணி..., தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்??

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இன்று ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிராக சென்னை அணி மோத உள்ளது.

இந்தியன் சூப்பர் லீக்:

சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 11 அணிகளுக்கு இடையில் இந்தியன் சூப்பர் லீக் தொடரின் 9 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக தலா 2 முறை போட்டியிட்டு வருகின்றன. இதன்படி, நேற்று நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி பெங்களூரு அணியை எதிர்த்து போட்டியிட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அசாமில் நடைபெற்ற இந்த போட்டியில், இரு அணிகளும் ஆட்டத்தின் முதல் பாதி வரையிலும் ஒரு கோலுக்காக போராடினர். ஆனாலும், முதல் பாதியானது கோலின்றி முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில், பெங்களூரு அணியின் சிவசக்தி நாராயணன் 50 வது நிமிடத்தில் கோல் அடிக்க, நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் ரோமெய்ன் 66 வது நிமிடத்தில் கோல் அடித்து பதிலடி கொடுத்தார்.

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஆசிய நாயகன் சிவ தாபா தங்கம் வென்று அசத்தல்!!

இதனால், இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இந்த ஆட்டத்தின் இறுதி நேரத்தில் பெங்களூரு வீரர் ஒரு கோல் அடிக்க, 2-1 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் பெங்களூரு அணி 13 புள்ளிகளுடன் 8 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் இன்று சென்னையின் FC அணியானது, ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்கு முந்தைய போட்டிகளில் இந்த இரு அணிகளும் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், யார் வெற்றி பாதைக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here