பல்லடம் சேடபாளையத்தை சேர்ந்த அம்பிகா என்பவர் தனது தாய் தந்தையின் பூர்வீக சொத்தை தன் பெயரில் எழுதி தரச்சொல்லி சினிமா துறையில் துணை இயக்குனராக இருக்கும் தனது சகோதரர் தங்கதுரையை பல நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே பல நாட்களாக பிரச்சனை நிலவி வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி பல்லடதை சேர்ந்த ஒருவர் தாராபுரத்தில் ஒரு தோட்டம் விற்பனைக்கு உள்ளதாக கூறி இவரை சேடபாளையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்தால் இவரின் தங்கை அம்பிகாவின் கணவர், மகன் மற்றும் இவர்களின் கூட்டாளிகள் சிலர் இருந்துள்ளனர். மேலும் இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்கதுரை அடித்து சித்திரவதை செய்து, பின்னர் வலுக்கட்டாயமாக மதுபானம் கொடுத்து மயக்கம் அடைய செய்துள்ளனர்.
இதன் பிறகு இவரை பெங்களூரில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர். பின் இதிலிருந்து மீண்டு வந்த தங்கதுரை பல்லடம் சேடபாளையம் காவல் நிலையத்தில் தனது தங்கை மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த போலீசார் அம்பிகாவின் கணவரை அரெஸ்ட் செய்துள்ளனர். இந்த நிலையில் அம்பிகா போலீஸ் விசாரணைக்கு பயந்து தலைமறைவாகியுள்ளார்.