ஆஸ்திரேலியா தொடரில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது சிராஜின் தந்தை காலமானார். ஆனால் தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட இந்திய வராத சிராஜ் தற்போது ஆஸ்திரேலியா தொடர் முடிவடைந்த பின்பு நாடு திரும்பி தனது தந்தையின் கல்லறைக்கு சென்று மலர் தூவி தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
சிராஜ்:
ஆஸ்திரேலியா சென்ற இந்தியா அணி டி 20 தொடரையும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் வென்று அசத்தியது. டெஸ்ட் போட்டிகளில் அறிமுக வீரர்களாக களமிறங்கிய அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். குறிப்பாக இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சிராஜ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் போட்டி துவங்குவதற்கு முன்பு சிராஜின் தந்தை எதிர்பாராத விதமாக காலமானார். தனது தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லாமல் சிராஜ் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாடினார். அவரது தந்தையின் இழப்பு சிராஜை பெரிதும் பாதித்தது. இதுகுறித்து பேசிய சிராஜ்,”என் தந்தை தற்போது உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக சந்தோசம் அடைந்திருப்பார்.அவரது ஆசியால் தான் நான் தற்போது 5 விக்கெட்டை வீழ்த்தியுள்ளேன். இந்த தருணத்தில் என்னுடன் என் தந்தை இருந்திருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.
அனிகா சுரேந்தரின் ஆபாச வீடியோ சர்ச்சை – ‘மார்பிங்’ என புலம்பும் நடிகை!!
தந்தைக்கு அஞ்சலி செலுத்திய சிராஜ்:
இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வீரர்கள் இந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். மேலும் அனைத்து வீரர்களுக்கும் அவர்களது நகரங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சிராஜ் தனது சொந்த ஊரான ஹைதெராபாதிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் தனது தந்தையை அடக்கம் செய்த இடத்திற்கு சென்றார். தனது தந்தையின் கல்லறைக்கு மலர்களை தூவி தனது அஞ்சலியை செலுத்தினார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.