ரோகிணியின் மாமாவால் வெளிவரும் உண்மை.., கண்டுபிடிக்கும் முத்து.., சிறகடிக்க ஆசை ப்ரோமோ!!

0

சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது ரோகிணியின் மாமா செய்யும் ஒவ்வொரு செயல்களையும் பார்த்து முத்துவுக்கு சந்தேகம் வருகிறது. இதனால் ரோகிணி எங்கு தான் மாட்டிக் கொள்வோமா என பயந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் முத்து இந்த ஆள் மலேசியாவில் இருந்து வந்த மாதிரியே தெரியல. ஏதோ பார்லர் அம்மா பித்தலாட்டம் பண்ணுது. அதை கண்டுபிடித்து ஆகணும் என தனது நண்பன் செல்வத்திடம் சொல்கிறார்.

இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ரோகிணியின் மாமாவை முத்து, செல்வம் இருவரும் சேர்ந்து போதை தலைக்கேற குடிக்க வைப்பார்களாம். குடிபோதையில் இருக்கும் அவரிடம் முத்து மலேசியாவில் இருந்ததை பற்றி விசாரிப்பாராம். ஆனால் அவர் நான் மலேசியா கிடையாது. இந்த ஊர்ல தான் கறிக்கடை வச்சிருக்கேன். எனக்கு சினிமால நடிக்க வாய்ப்பு தரேன் சொல்லித்தான் கூட்டிட்டு வந்தாங்க என உண்மையை உளறி விடுவாராம். மேலும் அந்த ஆள் மூலம் மற்ற அனைத்து விஷயங்களையும் முத்து தெரிந்து கொள்வாராம். இதுதான் அடுத்த வரும் எபிசோடில் நடக்குமாம்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here