அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்தவர் தான் கே பி அன்பழகன். சந்தோஷமாக இருந்து வந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் இப்போது மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது இவரது மருமகள் பூர்ணிமா கடந்த 18ம் தேதி விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீ பிடித்து பலத்த காயம் ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து அவர் தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பூர்ணிமாவுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருமகளின் இறப்பு அவரது குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரும்பி வந்துட்டேனு சொல்லு…, பயிற்சியில் அசத்தும் ஹர்டிக் பாண்டியா!!